நாளை கொரொனாவுக்கு விடுப்பு இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2021

நாளை கொரொனாவுக்கு விடுப்பு இல்லை!

அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் நலனுக்காக நாளை ஒரு நாள் (23.05.2021) மட்டும் கடைகள் திறந்திருக்க நமது முதல்வர் அவர்கள் அனுமதி தந்துள்ளார். 


உடனே ஒரு வாரத்திற்குத் தேவையானதை வாங்க எல்லாரும் வீதிக்கு வந்தா, அதுவே பெருந்தொற்றா மாற வாய்ப்பு அதிகம்.


ஒரு வாரம் வீட்டில்  இருக்கின்ற மளிகைப் பொருட்களை வைத்து நாட்களை நகர்த்த முயற்சி செய்யுங்க....


மிக மிக முக்கிய அவசியம் என்றால் மட்டுமே நாளை வெளியே போகவும். 


கறி, காய்கறி, மளிகை வாங்கி வீட்டில் நிரப்பிட்டா மட்டும் சந்தோஷம் கிடைச்சுடாது....அதைவிட உங்களோட உயிர் முக்கியம்.


மீன், முட்டை, காய்கறி வாங்க போய், தெரியாம கொரொனாவை வாங்கிட்டு வந்துராதிங்க...

 ஒருவரிமிருந்து பரவும் வைரஸின் நீர்த்திவலைகள் 8 மீட்டர் வரை காற்றில் மிதந்து வர முடியுமென ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக படிக்கிறோம்.


"நான் போன கடையில கூட்டமே இல்லைங்கன்னு சொல்லி பெருமைப் படாதீங்க...உங்களுக்கு முன்னாடி அந்த கடைக்குப் போனவரு  உங்களுக்காக கொரொனாவை அந்த இடத்துல விட்டுட்டு போயிருக்கலாம்.


😷😷😷😷😷

மறந்துடாதீங்க மக்களே!


நாளை Sunday கொரொனாவுக்கு விடுமுறை இல்லை.


😷😷😷😷😷

#நமக்காக உழைக்கும் அரசுக்கு ஒத்தழைப்பு தருவோம்.


#முகக்கவசம் முழுமையாக அணிவோம்.


#வீட்டிலே தங்கி உயிர்க் காப்போம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி