பிள்ளைகள் உயர் படிப்புகளை படித்து சிறந்த பதவிகளை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோர்களுக்கு உண்டு. மாணவர்களுக்கும் இதுபோன்ற கனவுகள் உண்டு. இத்தகைய கனவுகளை நனவாக்கும் வகையில் 2 முன்னோடி நிறுவனங்கள் ஒருங்கிணைந்துள்ளன.
வேலம்மாள் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முதன்முறையாக பள்ளிக் கல்வியோடு சமீபத்தில் தொடங்கப்பட்ட எட்டெக் பிளாட்ஃபார்ம் விபி லைவ் (edtech platform VB live) என்ற கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போது புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கான சிவில் சர்வீஸ் பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர் எம்விஎம் சசிக்குமார், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எஸ்.டி.வைஷ்ணவி சங்கர் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதுபற்றி அறிய 91 9677147777 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என வேலம்மாள் கல்விக் குழுமம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி