தமிழகத்தில் ஜுலை மாதத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்தன.இதனை ஏற்ற தமிழக அரசு பொதுதேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அலகுத் தேர்வுகள்,திருப்புதல் தேர்வுகளை ஆன்லைனில் ஜூன் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுக்குள் வராவிட்டல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வாட்ஸ் ஆப்பில் வினா தாள்களை அனுப்பி விடைகளை எழுதி வாங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி