ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு – Teachers List - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2021

ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு – Teachers List

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கு நியாயவிலைகடைகளில் கொரானா வைரஸ்நிவாரண தொகை ரூபாய் 2000 முதல்தவணையாக 15.05. 2021 முதல்வழங்கப்பட உள்ளது.


நியாயவிலை கடைகளில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாகசெயல்படுத்தி வரும் குடும்பஅட்டைதாரர்கள் சமூக விதிகளைகடைபிடித்து பொருட்களை பெற்றுசெல்வதை   சட்டம் ஒழுங்கு பிரச்சனைஏற்படாமல் செயல்படவும்இதுதொடர்பாக கண்காணிப்புகுழுவின்


தலைவருக்கு தகவல் தெரிவித்தும்எவ்வித புகார்களும் இடமளிக்காதவகையில் எவ்வித தொய்வும் இன்றிகுரானா வைரஸ் நிவாரணத்தொகைவழங்கப்படுவது செம்மையாகசெயல்படுத்தும் பொருட்டுபார்வையில் உள்ளபடி தலைவர்கள்மற்றும் ஆசிரியர்கள் அனைத்துநியாயவிலை கடைகளில் 15.05. 2021 முதல் பணியாற்ற நியமித்துஉத்தரவிடப்படுகிறது.


அனைத்து வட்டார கல்விஅலுவலர்கள், அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர்களின் கவனத்திற்கு:


மாண்புமிகு தமிழக முதலமைச்சர்அவர்களின் ஆணையின்படிகோரானா பெருந் தொற்றுஇரண்டாவது அலை தொடங்கியுள்ளஇச்சூழலில் பொதுமக்களுக்குநிவாரண தொகையான ரூ 4000 அறிவிக்கப்பட்ட நிலையில் , அதில் ரூ2000 முதல் தவணையாகபொதுமக்களுக்கு வழங்கி மாண்புமிகுதமிழக முதலமைச்சர் அவர்களால்இன்று துவக்கி வைக்கப்பட்டநிலையில் ,


மேற்கண்ட திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அவர்களின் உத்தரவின்படிஇணைப்பில் கண்டதலைமையாசிரியர்கள் ஆசிரியர்பெருமக்கள் கடந்த ஆண்டு  கோரானாபெருந் தொற்று காலத்தில் தமிழகமேவியக்கும்  வண்ணம் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த ஆசிரியப்பெருமக்கள்


தன்னார்வலர்கள் ஆக மிகச் சிறப்பாகபணிபுரிந்து பொதுவினியோககடைகளில் பொதுமக்கள் சமூகஇடைவெளி கடைபிடிக்கவும்,கடைகளில் பொருட்கள் சிறப்பாககுறித்த நேரத்தில் வழங்குவதற்கும்,சட்டம் ஒழுங்கு வராமல் அமைதியாகநடைபெறுவதற்கும் உறுதுணையாகஇருந்ததை போலவே,  இம்முறையும்  வருகின்ற 15.05.2021 சனிக்கிழமைமுதல் பொது மக்களுக்கான நிவாரணதொகையான முதல் தவணை ரூ 2000 முகக் கவசம் அணிந்து,சமூகஇடைவெளி கடைபிடித்துபொதுவினியோக கடைகளில்பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கும்,


இப்பணி தொய்வின்றி குறித்தநேரத்தில் சிறப்பாக நடைபெறுவதைக்கண்காணிப்பதற்கு ஏதுவாகஇணைப்பில் கண்ட ஆசிரியர்களைமதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் நியமனம் செய்துஆணையிட்டுள்ளார். எனவேதன்னலம் கருதாது சிறப்பாகபணிபுரியும் நம் ஆசிரிய பெருமக்கள்தன்னார்வலர்களாக மு க கவசம்அணிந்து, சமூக இடைவெளிகடைபிடித்து, கிருமிநாசினி உடன்வைத்துக்கொண்டு ,   இம்முறையும்மிகச் சிறப்பாக இப்பணியை 15.05. 2020 முதல் செய்து முடித்திட வேண்டும்என கனிவுடன்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.


/மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரின் ஆணைப்படி/


இணைப்பு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பட்டியல்


Teachers List - Download here...


7 comments:

  1. அய்யகோ... வேலை செய்யனுமா??

    ReplyDelete
  2. சரியான முடிவு...

    ReplyDelete
  3. நான் செய்ய தயாராக இருக்கிறேன் ...

    ReplyDelete
  4. salary high work zero.teachers.come all teachers corena 2000.distubte

    ReplyDelete
  5. Velai Ella teachers ku help a ga erruku na ready sir p.jayalakshmi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி