அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் தலைமை ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2021

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் தலைமை ஆசிரியர்

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்  அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார் தலைமை ஆசிரியர்  ஒருவர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது.


இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது.

அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்தப் பணத்தில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாணவர் சேர்க்கையின்போது அவர்களுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதால் மாணவர் சேரிக்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்  ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், "இப்பள்ளிக்கு மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களே சேர்கிறார்கள். இவர்களின் பெற்றோர் தற்போது வாழ்வாதாரம் இழந்து கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார்கள். இந்தத் தொகை அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் " என்றார்.

2 comments:

  1. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இவரைப்போன்று நல்லது செய்யுங்கள்.

    ஆசிரியர் பணி விரும்பும் நண்பர்களே!
    உங்கள் மற்றும் மற்ற நண்பர்,உறவினர் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க உதவியும், ஆலோசனையும் செய்யுங்கள்.

    அரசுப்பள்ளி நன்மைகளை விளக்கி கூறுங்கள்.

    கொரோனா தனியார் பள்ளி மோகத்தை தானாகவே தகர்த்துவிடும்.

    ReplyDelete
  2. அருமை அய்யா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி