செப்டம்பர், அக்டோபரில் தொடங்கும் 3வது அலைக்கு தயாராக வேண்டும் - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2021

செப்டம்பர், அக்டோபரில் தொடங்கும் 3வது அலைக்கு தயாராக வேண்டும் - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

 

இந்தியாவில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது. 4 லட்சத்துக்கு மேற்பட்டோரை தினமும் பாதித்து வந்த இந்த தொற்று தற்போது ஒன்றரை லட்சத்துக்கும் கீழே சரிந்து விட்டது. இதைப்போல உயிரிழப்புகளும் சரிந்துள்ளது.


இதன்மூலம் கொரோனா 2-வது அலையை இந்தியாக சிறப்பாக நிர்வகித்து இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:


கொரோனாவின் முதல் அலையை இந்தியா எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்தன.


அதேநேரம் 2-வது அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்களின் வெளியிட்ட ஆய்வுகளும், அது வீரியமாக இருக்கும் என கூறவில்லை. ஆனால் இந்த முறை நடந்தேறிய மத நிகழ்வுகள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளால் 2-வது அலை மிகுந்த வேகமாக பரவியது.


எனினும் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் 2-வது அலையை சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம். ரெயில்வே, விமான நிலையங்கள், ஆக்சிஜன் போக்குவரத்துக்காக ராணுவம் போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.


மொத்தத்தில் நியாயமான முறையில் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். கொரோனாவின் 2-வது அலையை சிறப்பாக கையாண்டதால், புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.


இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த அலை இளம் தலைமுறையினரை அதிக அளவில் பாதிக்கும் எனவும் எச்சரித்திருக்கின்றனர்.


இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என தெரிகிறது. எனவே இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமது மருத்துவ கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி