கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வோருக்கு வங்கிகள் வட்டி சலுகை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வோருக்கு வங்கிகள் வட்டி சலுகை!

கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வோருக்கு, பொது துறையைச் சேர்ந்த சில வங்கிகள் வட்டி சலுகைகளை அறிவித்துள்ளன. 


கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், யூகோ பேங்க், 999 நாட்களுக்கான வைப்பு நிதிக்கு, கூடுதலாக, 0.33 சதவீதம் வட்டி வழங்குவதாக தெரிவித்து உள்ளது. வரும் செப்., 30 வரை, குறைந்தபட்சம் ஒரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கும் இந்த சலுகை பொருந்தும் என, வங்கி அறிவித்துள்ளது. 


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, 'இம்யூன் இந்தியா டிபாசிட்' என்ற திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் டிபாசிட்டிற்கு கூடுதலாக, 0.25 சதவீதம் வட்டி தருகிறது. 'மூத்த குடிமக்களின் டிபாசிட்டிற்கு கூடுதலாக, 0.25 சதவீதம் என்ற வீதத்தில், 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்கப்படும்' என, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது. இது போல மேலும் பல வங்கிகள் வட்டி சலுகை வழங்க திட்டமிட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி