ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவறிக்கை தயார் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2021

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவறிக்கை தயார் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான  நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரைவறிக்கை தயார் செய்து வைத்திருப்பதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதிக்கு பின்னர், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பள்ளி, கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அந்த குழு தரும் பரிந்துரை அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களின் 10ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி