ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2021

ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல்


கொரோனா காலகட்டம் மற்றும் அது தொடர்பான ஊரடங்கு இருக்கும் நிலையில், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.


தனியார் பொறியியில் கல்லூரிகளுக்கு கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாக பேராசிரியர்கள் பலர் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அன்றியோ, பேராசிரியர்களின் விளக்கங்களை கேட்காமலோ, அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி