NEET EXAM - கருத்து தெரிவிக்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2021

NEET EXAM - கருத்து தெரிவிக்க இன்றே கடைசி

 தமிழகத்தில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிடம், நீட் தேர்வு தொடர்பான கருத்துகளை, ஒவ்வொருவரும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் வாயிலாகவோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்திலும், நேரடியாகவும் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாள். அதன்பின், அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் நிறுத்தம்


அரசின் 'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு திடீரென வழிகாட்டுதல்கள் நிறுத்தப் பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காததால், நீட் தேர்வில் முன்னிலை பெற முடியவில்லை.இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்வி துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் அறிமுகமானதால், தி.மு.க., ஆட்சியில் தொடர்வதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்' என தி.மு.க., கூறி வருவதால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பயிற்சி அளிக்க உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை; 


தாமதமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நீட் இலவச பயிற்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீட் ஒருங்கிணைப்பாளர்களின் மாநில 'வாட்ஸ் ஆப்' குழுவில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.நீட் பயிற்சி குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் நீட் பயிற்சியின் அடுத்தடுத்த வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல் பெற முடியாமல், ஆசிரியர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தவித்து வருகின்றனர்.இந்த நெருக்கடியான நிலையில், பயிற்சியை தொடர்வதா, நிறுத்துவதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

3 comments:

  1. நீட் தேர்வு வேண்டும் ஏன் எணில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுகொடுப்பதில் வேற்றுமை காணப்படுகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி