பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அவர்களின், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மற்றும், பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தேர்ச்சி சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழை, அடுத்த வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சான்றிதழ் வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி