20 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் ஆப் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2021

20 லட்சம் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் ஆப்

 

'வாட்ஸ் ஆப்' சமூக வலை தள நிறுவனம், கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது.


மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளோம். தேவையற்ற மற்றும் வன்முறையை துாண்டும் தகவல்கள் பரிமாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் எடுத்தோம்.

  அதன்படி மே 15 - ஜூன் 15 வரை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தேவையற்ற, வன்முறையை துாண்டும் வகையிலான தகவல்கள் பரிமாற்றப்பட்ட 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கினோம். சர்வதேச அளவில் மாதந்தோறும் இதுபோல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கி வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி