தமிழ் வழி இடஒதுக்கீடு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., மனு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2021

தமிழ் வழி இடஒதுக்கீடு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., மனு தள்ளுபடி

 

வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும், தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தம் செல்லும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதனை டிஎன்பிஎஸ்சி 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்துவது, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், இட ஒதுக்கீட்டை எதிர்காலத்தில் பின்பற்ற உத்தரவிடக்கோரி டிஎன்பிஎஸ்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, டிஎன்பிஎஸ்சி மனுவை தள்ளுபடி செய்தது.

திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவில், &'தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.&'குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய - பி.எஸ்.டி.எம்., - சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். &'தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக்கல்வி, கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்&' என மனு செய்தார். மார்ச்சில் நீதிபதிகள்என். கிருபாகரன், பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், &'வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு 20 சதவீதம்முன்னுரிமை அளிக்கும்சட்டத் திருத்தம் செல்லுபடியாகும். &'இதை டி.என்.பி.எஸ்.சி., 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்ற வேண்டும்&' என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தாக்கல் செய்த மனு:

சட்டத் திருத்தத்திற்கு முன், தேர்வு அறிவிப்பு வெளியானது.தேர்வு நடத்தி விட்டோம். தமிழ்வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றுவது மற்றும் அனைவரின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. காலதாமதம் ஏற்படும்.

சட்டத்திருத்தத்தின்படி முன்தேதியிட்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். சட்டத் திருத்தத்தின்படி எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.

நீதிபதிகள், &'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற, மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை உட்பட சில பல்கலைகளில் முறைகேடாக சான்று பெறுகின்றனர்&' என அதிருப்தி வெளியிட்டு, டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி