அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை.. அனுமதி பெற்று நடத்தலாம் - முதல்வர் அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2021

அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை.. அனுமதி பெற்று நடத்தலாம் - முதல்வர் அறிவிப்பு.!

 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


திருமண நிகழ்வில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை தொடரும் என்றும், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி