பாலிடெக்னிக் 'அட்மிஷன்' பதிவுக்கு 19 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2021

பாலிடெக்னிக் 'அட்மிஷன்' பதிவுக்கு 19 வரை அவகாசம்


பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா முதலாம் ஆண்டு படிப்பில், 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் துவங்கியது.


பதிவு இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், கூடுதல் மாணவர்களை சேர்க்கும் வகையிலும், 19ம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 


டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், https://tngptc.in/ என்ற இணையதளத்தில், தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி