TRB - யில் ஏராள வழக்குகள் தேக்கம் விரைந்து முடிக்க சிறப்பு குழு நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2021

TRB - யில் ஏராள வழக்குகள் தேக்கம் விரைந்து முடிக்க சிறப்பு குழு நியமனம்

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேங்கி கிடக்கும் ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது மற்றும் 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது போன்றவை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. விதிமீறல் டி.ஆர்.பி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளில், முறைகேடுகள் மற்றும் விதி மீறல்கள் நிகழ்ந்ததாக புகார்கள் உள்ளன.


இது குறித்து, சென்னை போலீசிலும் சில வழக்குகள் விசாரணையில் உள்ளன. விலகல்டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வு குறித்தும், நியமன நடவடிக்கையில் விதிமீறல்கள் குறித்தும், ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக, டி.ஆர்.பி.,யின் பணி நியமன நடவடிக்கைகளில் இருந்து உயர் கல்வித்துறை விலகியுள்ளது. 


டி.என். பி.எஸ்.சி., வழியே கல்லுாரி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு மாதங்களாக டி.ஆர்.பி.,யின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதுகுறித்து, நமது நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. அதனால், டி.ஆர்.பி.,யில் பணிகளை தொடர, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, டி.ஆர்.பி., தொடர்பாக தேங்கி கிடக்கும் வழக்குகளை முடிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

அறிவுறுத்தல்


இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் லதா தலைமையில், உறுப்பினர் செயலர் சேதுராம வர்மா, உறுப்பினர் அறிவொளி, பாஸ்கர சேதுபதி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப் பட்டு உள்ளது.இந்த குழுவினர், அரசின் சட்டத்துறை வல்லுனர்களுடன் இணைந்து, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கு பணிகளை கவனிக்க, புதிதாக சட்ட உதவியாளர்கள் இருவரும் நியமிக்கப்பட உள்ளனர்.


சட்ட உதவியாளர் பணிக்கு, தேசிய சட்ட கல்லுாரி அல்லது சென்னையில் சீர்மிகு சட்ட கல்லுாரியில் சட்டப்படிப்பு முடித்த அல்லது சட்ட மேற்படிப்பு படிப்போர், வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் இருவருக்கு, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

5 comments:

  1. Terrminate theTET is only sollution for block Employment seniority wose appoitment is only remedy for bt assistant appoiment

    ReplyDelete
  2. Terrminate theTET is only sollution for blocks and Employment seniority wise appoitment is only remedy for bt assistant appoiment

    ReplyDelete
  3. Good decision
    இனிதான் tet appoinment pattriya தகவல் வரும்

    ReplyDelete
  4. பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு ஒன்றுதான் நிரந்தர தீர்வு அதுவும் வெளிப்படைத்தன்மையும் கூட

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி