10,12ம் வகுப்பு தேர்வுக்கான தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2021

10,12ம் வகுப்பு தேர்வுக்கான தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

தேர்வு கட்டணத்தை திருப்பி தருதல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெரும்பாலான மாநிலங்கள் 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டன. அதேப்போன்று மத்திய கல்வி வாரியங்களும் தேர்வை ரத்து செய்தது.


இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையை மாணவர்களிடமே திருப்பி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் கிடையாது. ஏனெனில் தேர்வுகளுக்குகான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னர் தான் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசுகள் கண்டிப்பாக மேற்கொண்டு இருக்கும். அதனால் இந்த விவகாரத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி