தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2021

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல்

 தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்துபொறியியல், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியது:

நடப்பு கல்வியாண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி) விரைவில் திறக்கப்பட உள்ளது.இதற்கிடையே, சிறுபான்மையினர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளர்களை தேர்வு செய்வதில் நிகழும் மோசடிகளைத்தவிர்க்க, மத்திய அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, என்எஸ்பி தளத்தில் பதிவேற்றப்படும் போலி விண்ணப்பங்களை தடுக்கும் வகையில், மாணவர்களின் சுய விவரங்களை ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு, மின்னணு முறையில் சரிபார்க்கும் முறையை மத்திய சிறுபான்மையின நலஅமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.


இதையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையேல், நடப்பாண்டு தேசிய கல்வி உதவித்தொகை  திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க இயலாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் ஆதார்விவரங்களை துரிதமாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 62 ஆயிரம் மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி