மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் தரம் குறித்து மாணவர்களின் கருத்தைப் பெற்று விபரம் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2021

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் தரம் குறித்து மாணவர்களின் கருத்தைப் பெற்று விபரம் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

20.07.2021 அன்று நடைபெற்ற கூட்ட அறிக்கையில் , மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் , விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்களின் தரம் , அளவு , வண்ணம் மற்றும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது குறித்து மாணவர்களின் கருத்துகளை பெற்று அனுப்புமாறு கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 ஒவ்வொரு கல்வியாண்டும் , விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டவுடன் , 4 அல்லது 5 நாட்களுக்குள் மாணவர்களிடம் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் பயன்பாடு குறித்து கருத்துகள் பெறப்பட வேண்டும்.


2. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியாக அறிக்கை பெறப்பட வேண்டும்.


3 . விலையில்லாக் கல்வி உபகரணப்பொருட்கள் பெறப்பட்டவுடன் , பொருட்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா மற்றும் அவற்றின் தரம்சரியான முறையில் உள்ளனவா உரிய அலுவலர் மூலம் Randomly சரிபார்த்து , அதன் விவரத்தினை உடனடியாக அனுப்பப்படவேண்டும்.


 எனவே , மேற்காண் பொருள் சார்ந்து , மாவட்டத்தில் உள்ள மாவட்டக்க ல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள் வாயிலாககருத்துகள் கோரப்பட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , கல்வி மாவட்டம் வாரியான தொகுப்பறிக்கையை , 13.08.2021 க்குள் சென்னை -6 , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகத்திற்கு அனுப்ப ஏதுவாக ( இரண்டுநகல்கள் ) விரைவு அஞ்சலில் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSE - Cost free Thing Proceeding - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி