பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போது இல்லை - ஆலோசனைக்கு பிறகு புதுச்சேரி அமைச்சர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2021

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தற்போது இல்லை - ஆலோசனைக்கு பிறகு புதுச்சேரி அமைச்சர் தகவல்.


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடா்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கல்வித்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி அமைச்சர் கொரோனா மூன்றாவது அலை எப்போது தாக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ துறையும் எச்சரித்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சாத்தியமில்லை. ஆகஸ்ட் 15க்கு பிறகு மீண்டும் ஆலோசிக்கப்படும். கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு கல்லூரிகள் திறக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


2 comments:

  1. அப்புறம் எதுக்கு ஆலோசனன?

    ReplyDelete
  2. அது தமிழ்நாட்டு ஓதம்....
    இங்க
    ஆலோசனை நடக்கும் அன்பில் பொய் மொழி பேட்டி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி