தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2021

தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது இருக்கும் பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


மின்துறை பணியிடங்கள்:


தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி எவ்வித தொய்வும் இன்றி பணிகளை முடிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சில தகவல்களை வெளியிட்டு உள்ளார். அவர் பேசுகையில், மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவை விரைவில் நிரப்பப்படும். தற்போதைக்கு உள்ள ஊழியர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தற்போது அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்த அமைச்சர் நேரடியாக கணக்கீடு எடுக்கும் பணிக்கு 50% ஊழியர்கள் மட்டுமே உள்ளதாக கூறினார். மின்துறையின் 9498794987 எண் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும் அமைச்சர் பேசினார். இதனிடையே மின்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் கூறி இருப்பது இளைஞர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

2 comments:

  1. வெளிப்படையா போடுங்க போஸ்டிங்...
    கடந்த ஆட்சியில டிரைவர் கண்டக்டர் அப்படித்தானே போட்டோம் 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி