பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2021

பான்-ஆதாா் எண் இணைப்பு: காலக்கெடு 6 மாதங்கள் நீட்டிப்பு.

 

பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி