பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2021

பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை:

 


தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் இன்று 18-9-21 சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


இதில் பணியாளர்கள் நலன் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்து கோரிக்கை ஆராயப்பட்டது.


இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்,  பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா  மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .


அதுபோலவே அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்கள் பங்கேற்று பணி சார்ந்த கோரிக்கை குறித்து பேசினார்கள்.


அப்போது பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளும்  வலியுறுத்தினார்கள்.


இதில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை பள்ளிக்கல்வி அமைச்சரிடம் கொடுத்து  கோரிக்கை நிறைவேற்ற கேட்டு கொண்டார்.


இங்கனம் : 


சி.செந்தில்குமார் 

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 

செல் : 9487257203

1 comment:

  1. PLEASE HORORABLE CHIEF MINISTER THALAPATHY AVARGALE AGE RELAXATION FOR PG WITH BED FOR ALL CANDIDATES UP TO 59

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி