ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் நடக்கும் ஆலோசனையில் அரசு அங்கீகாரம் பெற்ற, அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, கற்றல் திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், புதிதாக சேர்ந்த மாணவர்களை ஒருபோதும் அரசு தக்க வைத்துக்கொள்ள முடியாது
ReplyDelete