SSC - 3261 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2021

SSC - 3261 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 மத்திய அரசு தேர்வாணையத்தின் (Staff Selection Committee - SSC) மூலம் 3261 காலிப் பணியிடங்கள் நிரப்புதல் - tamilnaducarreerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடக் குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!


பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் 


ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் ( Staff Selection Commission ) பல்வேறு துறைகளில் , பல்நோக்கு பணியாளர் , பெண்கள் படைப்பயிற்றுநர் , மருத்துவ உதவியாளர் , பொறுப்பாளர் , போன்ற 3261 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021 ஆகும் . பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணிநியமனம் பெறுவதற்கு ஏதுவாக இப்போட்டித்தேர்விற்கான அனைத்து பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in " என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 


ஆகவே , இப்போட்டித்தேர்வினை எழுத விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இதுமட்டுமின்றி , அனைத்து அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களின் வாயிலாக பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கென ( Staff Selection Commission Exam ) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாகவோ | இணைய வழியாகவோ நடத்தப்படவுள்ளன. எனவே , தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. , அவர்கள் தெரிவித்தார்கள் .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி