மக்கள் பள்ளி திட்டம் அக்.18ம் தேதி துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2021

மக்கள் பள்ளி திட்டம் அக்.18ம் தேதி துவக்கம்!

 

திருச்சி திருவெறும்பூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 


தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஒன்று மக்கள் பள்ளி, மற்றொன்று மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் அடுத்த வகுப்புக்கு வருகின்றனர்.

இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை போக்குவதற்காக தன்னார்வத்தோடு வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் என ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நாள்தோறும் பாடம் கற்று கொடுக்க வேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வசம் உள்ளது. இந்த திட்டம் வரும் 18ம் தேதி துவங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. இதற்குள் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படுமா????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி