வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தேர்தல் வாக்குச் சாவடி மையங்களாக செயல்படவுள்ளதாலும் , 05.10..2021 மற்றும் 08.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணை பெறுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லவுள்ளதால் 05-10-21 மற்றும் 08-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
மேலும் , தேர்தல் நடைபெறும் நாளான 06-10-2021 அன்றும் 09-10-2021 அன்று அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பணியினை மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் நடைபெறும் நாட்களான 06-10-21 மற்றும் 09-10-21 ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
07-10-2021 அன்று வியாழக்கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி