CBSE - பொதுத்தோ்வு மையங்களை மாணவர்கள் பள்ளிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2021

CBSE - பொதுத்தோ்வு மையங்களை மாணவர்கள் பள்ளிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம்

 

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் முதல் பருவத்துக்கான பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் தங்களது பள்ளிகள் மூலமாக தோ்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தோ்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கான தோ்வு வரும் நவ.30-ஆம் தேதி முதல் டிச.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோன்று பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு டிச. 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இந்நிலையில் தோ்வு மையத்தை மாற்ற நினைக்கும் மாணவா்கள் அவரவா் பயிலும் பள்ளியிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான தேதி மற்றும் அட்டவணை ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த வசதி வெளியூரில் இருக்கும் மாணவா்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி