சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு.: நவ.30-ம் தேதி முதல் தேர்வுகள் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2021

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு.: நவ.30-ம் தேதி முதல் தேர்வுகள் தொடக்கம்

 

சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகளை சரியான நேரத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதனால், பொதுத்தேர்வுகள் நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவித்து இருந்தது. முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பாடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில் தற்போது சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு-கான அட்டவணையை வெளியிட்டுள்ளனர். நவ.30-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி