பொதுத்தேர்வு 2021 - மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2021

பொதுத்தேர்வு 2021 - மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் வெளியீடு.


மார்ச் 2020 இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியினை இணையதளம் வாயிலாக மேற்கொள்வது தொடர்பாக , ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இரண்டு கணினி பயிற்றுநர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டு , அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட கணினி பயிற்றுநர்களே , அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் , இணையதளம் மூலம் மேற்கொள்ளும் பணிக்கு அந்தந்த மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக ( Co - ordinator ) செயல்படவேண்டும் என பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டது. தற்போது மாவட்ட வாரியாக செயல்பட்டு வரும் அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் இத்துடன் இணைத்தணுப்பப்படுகிறது , புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி , திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான தேர்வுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ( Co - ordinator ) செயல்படுவதற்கு நன்கு பயிற்சி பெற்ற இரண்டு கணினி பயிற்றுநர்களைத் தேர்வு செய்து , அவர்களின் பெயர் , பணிபுரியும் பள்ளி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களை 25.11.2021 - க்குள் மின்னஞ்சல் வாயிலாக இவ்வலுவலகத்திற்கு ( மின்னஞ்சல் முகவரி - deeflsec @ amail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , ஏற்கனவே தங்கள் மாவட்டத்தில் தேர்வுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக ( Co - ordinator ) செயல்பட்டு வரும் கணினி பயிற்றுநர்களின் பட்டியலில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதன் விவரத்தை 25.11.2021 - க்குள் இவ்வலுவலத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக ( மின்னஞ்சல் முகவரி dgeflsec@gmail.com ) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி