இல்லம் தேடிக் கல்வி- தன்னார்வலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2021

இல்லம் தேடிக் கல்வி- தன்னார்வலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளிமற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 % மணிநேரம் ( மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் ) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் " இல்லம் தேடிக் கல்வி " செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி நேரங்களைத் தவிர , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது . இத்திட்டம் முழுவதும் தன்னார்வத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் . விழிப்புணர்வு நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு திறந்த அழைப்பை வழங்கும் . தன்னார்வலர் தேர்ச்சியானது , தன்னார்வர் கொடுத்த தரவுகளை சரிபார்த்தல் , பின்புல ஆய்வு , கல்வியில் முன் அனுபவம் , குழந்தைகளை கையாளும் திறன் , தன்னார்வலர் நேரடி சந்திப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு தயார் நிலை அறிதல் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் . தன்னார்வலரைப் பயன்படுத்துவதற்கான அனைத்து தேடிக் கல்வி " நிலைகளையும் இணையதளம் பொருட்டு " இல்லம் எளிதாக்கும் ( http://illamthedikalvi.tnschools.gov.in/ ) மற்றும் இணையவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது . இவற்றைப் பயன்படுத்தி பள்ளி - மாணவர் தன்னார்வலர் - கிராம தொடர்பு தடையின்றி நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் ( மாநில , மாவட்ட , பள்ளி அளவில் ) , உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

Illam thefi Kalvi Instructions - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி