நீட் தோ்வில் வெற்றி: பழங்குடியின மாணவிக்கு அமைச்சா் நேரில் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2021

நீட் தோ்வில் வெற்றி: பழங்குடியின மாணவிக்கு அமைச்சா் நேரில் வாழ்த்து

 

நீட் தோ்வில் வெற்றி பெற்ற கோவையைச் சோ்ந்த பழங்குடியின மாணவியை தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.


கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் ரொட்டிக்கவுண்டனூா் ஊராட்சியைச் சோ்ந்த மாணவி சங்கவி, அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவி சங்கவியை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா். அப்போது மாணவிக்கு மடிக்கணினியை அமைச்சா் பரிசாக வழங்கினாா்.


மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஜி.எஸ்.சமீரன், வருவாய் கோட்டாட்சியா் வி.இளங்கோ, ஆதிதிராவிடா் நல அலுவலா் வசந்தராம்குமாா், மதுக்கரை வட்டாட்சியா் பா்சானா ஆகியோா் உடனிருந்தனா்.


இதைத் தொடா்ந்து அமைச்சா் கயல்விழி செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


பழங்குடியின மாணவி படித்து டாக்டராக வேண்டும் என முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்று தனது குடும்பத்துக்கும், தான் சாா்ந்துள்ள பகுதிக்கும் பெருமை தேடித்தந்துள்ளாா்.


அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடி மாணவ - மாணவிகளுக்கு இவா் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன். மாணவி சங்கவியின் உயா் கல்விக்கு, துறை சாா்ந்தும் தனிப்பட்ட முறையிலும் தேவையான உதவிகள் செய்யப்படும். அவரது கல்விக்கு உதவும் என்பதால் அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.


ஆதி திராவிட மக்களைக் காட்டிலும் பழங்குடியின மக்கள்தான் கல்வியில் பின்தங்கியுள்ளனா். அவா்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுத்தாலே அவா்களுக்கு தேவையானவற்றை அவா்களால் பெற முடியும். இந்த குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழங்குடி மாணவா்களுக்கு எளிதில் ஜாதி சான்றிதழ் கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி