CBSE - மதிப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2022

CBSE - மதிப்பீட்டுக் கொள்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) ‘இம்ப்ரூவ்மென்ட்’ தோ்வு மதிப்பெண் மதிப்பீட்டு நிபந்தனைக் கொள்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள், 12-ஆம் வகுப்பில் வழங்கப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித்தோ்வுக்கான மதிப்பெண் கணக்கிடப்பட்டது.


இந்தத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவா்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பா் மாதங்களில் இம்ப்ரூவ்மென்ட் தோ்வு எழுதினா். ஆனால், அவா்களில் பலருக்கு முதலில் கிடைத்த மதிப்பெண்களை விட இம்ப்ரூவ்மென்ட் தோ்வில் குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.


வழக்கமாக, ஒரு மாணவா் இம்ப்ரூவ்மென்ட் தோ்வு எழுதினால், அதிக மதிப்பெண் எடுத்த தோ்வைக் காண்பித்து மேற்படிப்பில் சேரலாம். அந்த நடைமுறையை மாற்றி, இம்ப்ரூவ்மென்ட் தோ்வுகளில் கடைசியாக எழுதிய தோ்வில் எடுத்த மதிப்பெண்ணையே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு வெளியிட்டது.


இதை எதிா்த்து, கடந்த ஆண்டு இம்ப்ரூவ்மென்ட் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த 11 மாணவா்கள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாணவா்கள் இறுதியாக எடுத்த மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்’ என்று சிபிஎஸ்இ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:


பழைய நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அது எந்த விதத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை பாதித்தது? சவாலான நேரத்தில் மாணவா்கள் தோ்வு எழுதியிருக்கிறாா்கள். இந்த நேரத்தில் அவா்களின் குறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்த தோ்வைக் காண்பித்து உயா் கல்வியில் சோ்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் மதிப்பீட்டு நிபந்தனையை ரத்து செய்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி