ஆணை :
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 1 : 40 என்ற ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப , 2012-2013ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு , ரூ.9300-34800 . ரூ .4800 / - தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்தும் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்காண் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடவாரியான பட்டியல் மற்றும் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாரியான பெயர்ப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1591 PG Teachers Post Continuation.pdf - Download here...
PG Transfer counselling yeppo
ReplyDeleteகடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக பணியேற்றவர்கள் ஒரு இடத்தில் ஒராண்டு கூட பணியாற்றாமல் தற்போது கலந்தாய்விற்கு இடைக்கால தடை பெற்றுள்ளனர்.இது நியாயம் தானா?. இவர்களால் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலருக்காக இவ்வளவு பேர் பரிதவிக்கும் நிலைமை.இது என்ன கொடுமை? அரசு என்னதான் முடிவு செய்துள்ளது? கலந்தாய்வை நடத்தாமல் இருக்க இவர்கள் செய்யும் சதியா இது? சங்கங்கள் எங்கே சென்றனர்? நமக்கு நடப்பது மிகப்பெரிய அநியாயம் இதை அரசு புரிந்து கொண்டு இந்த கலந்தாய்வை நடத்துமா? இல்லை இப்படியே தவிக்க விடுமா?
ReplyDelete