எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு மார்ச் 17 வரை விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2022

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு மார்ச் 17 வரை விண்ணப்பம்

 

பொது மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ.,வில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு, மார்ச் 17க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப் படிப்பு


இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு முடித்தவர்கள், மேலாண்மை பாடத்திற்கான எம்.பி.ஏ., முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை வழியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 'சிமேட்' என்ற இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' துவங்கி உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க விரும்பும் பட்டதாரிகள், இந்த தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி