தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சித்த மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும் 28ல் துவங்குகிறது.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய 'ஆயுஷ்' அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிறுவனத்தில், 2021- - 22ம் ஆண்டு பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது.இதில், மொத்தம் உள்ள 58 இடங்களில், நிறுவன ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீத இடங்கள் நிரப்பபட்டன.
அனைத்து இந்திய, சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைத்தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 70 சித்தா டாக்டர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வின் வாயிலாக, நிறுவன ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடங்கள் மற்றும் அயல்நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.
இதையடுத்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, பிப்., 28 முதல் மார்ச் 3 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று கட்ட கலந்தாய்வுகளுக்கு பின், அகில இந்திய ஒதுக்கீடுக்கான இடங்கள் நிரப்பப் படாமல் மீதம் இருந்தால், அந்த இடங்களுக்கான கலந்தாய்வு பின்னர் தேதி அறிவிக்கப் பட்டுநடத்தப்படும்.
மேலும், பி.ஹெச்டி., ஆராய்ச்சிப் படிப்பிற்கான, நடப்பாண்டு மாணவர் சேர்க்கையின் நுழைவுத் தேர்வு, மார்ச் 6ல் நடைபெறும் என, நிறுவன இயக்குனர், மீனாகுமாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி