எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கான, தேசிய வருவாய் வழி தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தாவிட்டால், 'ஹால் டிக்கெட்' கிடைக்காது என, தேர்வு துறை எச்சரித்துள்ளது.அரசு தேர்வு துறை இணை இயக்குனர் பொன்.குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு, பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த விபரங்களை, தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாதோர், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது. எனவே, பள்ளிகள் தரப்பில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்து, அதன் விபரத்தை தேர்வு துறை இணையதளத்தில், உதவி இயக்குனர்கள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி