Breaking Now : Public Exam May 2022 - 10,11,12th Std Time Table Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2022

Breaking Now : Public Exam May 2022 - 10,11,12th Std Time Table Published.

Public Exam May 2022 - 10,11,12th Std Schedule :


10,11,12- ஆம் வகுப்புக்கான மே 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


Practical Exam :

10,11,12 - ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.

10- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 6 - மே 30 வரை நடைபெறும்



12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்



11- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 9 - மே 31 வரை நடைபெறும்




Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி 

12th Std - ஜூன் 23- ஆம் தேதி வெளியிடப்படும்.

 11th Std - ஜூலை 7- ஆம் தேதி வெளியிடப்படும்.

10th Std - ஜூன் 17- ஆம் தேதி வெளியிடப்படும்.


2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு 13.06.2022 முதல் துவங்கும்.


11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் துவங்கும்

12 comments:

  1. Nee time table vittu naasama pochu ponkada

    ReplyDelete
  2. எக்ஸாம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் நலன் கருதி கவுன்சிலிங் இனி எப்போதும் இல்லை அவர்கள் வேலையை பார்க்கலாம்

    ReplyDelete
  3. அறிவு இருந்தால் தானே யோசிப்பானுக

    ReplyDelete
  4. பொது தேர்வு அட்டவணை வெளியீடு.ஜுன் வரை செல்கிறது.இனி இந்த வருடம் கலந்தாய்வு இல்லை.ஜூனில் பள்ளி தொடங்குவதால் அடுத்த வருடமும் சந்தேகம் தான்.எங்கள் பிள்ளைகளை எங்கு பள்ளியில் சேர்ப்பது.என் மனைவி 2014 trb தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம்.பணி சேர்க்கை செப்டம்பர் மாதத்தில் என்பதால் ஏற்கனவே அந்த ஆண்டின் கலந்தாய்வு ஜூனில் முடிந்ததால் சொந்த மாவட்டத்தில் பணியிடம் கிடைக்கவில்லை.மலை மாவட்டத்தில் பணி கிடைத்தது.கீழே வர நான்கு ஆண்டுகள் ஆனது.பின் கலந்தாய்வுக்கு தகுதி 3ஆண்டுகளாக மாற்றபட்டது.பின் பெருந்தொற்று காரணமாக கலந்தாய்வு இல்லை.2014ல் பணியிடம் பெற்று மாவட்டத்தில் முதலாவதாக வந்தும் இன்னும் சொந்த மாவட்டம் சொல்ல முடிய வில்லை.8வருடங்களாக எங்கள் குழந்தைகள் தாய் தந்தையின்றி அனாதைகள் தான்.அரசு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்தும் எங்கள் குழந்தைகளை பிரிந்து வேறு மாவட்டத்தில் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.கலந்தாய்வை தற்போது நடத்தி விட்டு பிறகு(தேர்வு முடிந்த பிறகு) பணியிலிருந்து விடுவியுங்கள்.

    ReplyDelete
  5. மே இரண்டாவது வாரத்திற்குள் தேர்வு முடியும் வகையில் அட்டவணை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 11ம் வகுப்பு புத்தகங்களை எல்லாம் எடைக்குப் போட்டு சமோசா வாங்கத்தின்னலாம் என்றிருந்த 11ம் மாணவர்களுக்கும் சரி, +1 மாணவர்களுக்கு +2 பாடத்தை இப்போதே ஆரம்பித்து கல்விப் புதுமை செய்யும் தனியார்ப் பள்ளிகளுக்கும் சரி இந்தப் பொதுத் தேர்வு அறிவிப்பு உண்மையிலேயே வயிற்றில் அமிலம் வார்த்தது போல இருக்கும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த அறிவிப்பை மே 31 வரை காப்பாற்றிக் கொண்டு சென்றால் பட்டுப் போய்க் கொண்டிருக்கும் கல்வியின் வேர் சற்றளவாவது இளைப்பாறும், இல்லையெனில், பல மாணவர்கள் இளம் குற்றவாளிகளாக சமூகத்தில் உலா வருவார்கள்.

    ReplyDelete
  6. Jee Main exam session 2 start at 24-05-2022, School education schedule could affect the state board student who appear for the exam. Government plan maths group 'A' exam shouldn't come on those days , then it is helpful

    ReplyDelete
  7. கல்வித்துறை ஏன் இப்படி ....மட்டமாக போகிறது என்று தெறியவில்லை மிக திறமையான அமைச்சர் அமைந்தும் சில அதிகாரி களால் இப்படி எல்லாம் நடக்கின்றது

    ReplyDelete
  8. இதற்கெல்லாம் காரணம் சங்கங்கள் தான்.எந்தவொரு சங்கத்தையும் குறை சொல்ல விரும்பவில்லை.ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையான கலந்தாய்வு பற்றி வலியுறுத்தியதா!ஆனால் நாங்கள் உங்களுக்கு விடுமுறை பெற்று தந்தோம் அல்லது நாம் எதிர்பார்க்காத சில சலுகைகளை பெற்று தந்தோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.இதனால் யாருக்கு என்ன பயன்?ஒரு பயனும் இல்லை.சங்கங்கள் பின்னணி இல்லாமல் வழக்கோ,போராட்டமோ நடைபெறுவதில்லை.அவர்களின் சுயலாபத்திற்கான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவார்கள்.அதனால் பலன் அவர்களுக்கே,நம்முடைய கோரிக்கை எட்டு ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு செல்லாததற்கு சங்கங்களும் ஒரு காரணமே.எனவே நான் எந்தவொரு சங்கத்திலும் இனி செயல்பட மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. S u r right sir... Entha sangamum counseling patri valuyurithiyathaga theriyavillai sir...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி