தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.
பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., பிரதான தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்வு ஏப்., 21, 24, 25, 29, மே 1 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மார்ச் 1 முதல் ஏப்., 5 வரை நடந்தது.இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, நாளை துவங்க உள்ளது; மே 3 வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட தேர்வானது மே 24 முதல் 29 வரை நடக்க உள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி