ரூ.1000 கல்வி உதவி தொகை திட்டம் மாணவியர் பட்டியல் சேகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2022

ரூ.1000 கல்வி உதவி தொகை திட்டம் மாணவியர் பட்டியல் சேகரிப்பு.

தமிழக அரசின், 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை பெறும் திட்டத்துக்கு, கல்லுாரிகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவியரின் பட்டியல் சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழக அரசின் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என, சமீபத்தில் மாற்றப்பட்டது. இதன்படி, தமிழக கல்லுாரிகளில் பட்டப் படிப்பு, டிப்ளமா மற்றும் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவியருக்கு, அவர்களின் படிப்பு முடியும் வரை, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.புதிய கல்வி ஆண்டில் கல்லுாரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... 2000 pages.... materials will be sent via courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி