மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2022

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

 கல்வி கட்டண பாக்கி செலுத்தாத மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 10ம் வகுப்புக்கு வரும் 6ம் தேதி, பிளஸ்1க்கு வரும் 10ம் தேதி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, அந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.


சில தனியார் பள்ளிகளில், நடத்தை மற்றும் கல்வி கட்டண பாக்கி செலுத்தாதது போன்ற காரணங்களால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாதவாறு, ஹால் டிக்கெட் தராமல் நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், கல்வி அலுவலகங்களில் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘அரசு தேர்வு துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், பொது தேர்வில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இதில் புகார் எழுந்தால், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. mirthika coaching centre.. tv malai. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates...more than 2000 pages... 10 books for 10 units.. 1000 questions free for those who buy our materials...materials will be sent by courier... contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி