தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2022

தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு - செய்திக் குறிப்பு வெளியீடு



தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாவதனால் மாணவர்களின் நலன் கருதியும் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கும் ஏதுவாக இனிவரும் நாட்களில் நடக்க இருக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அன்று தேர்வு எழுதும் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வருவர்.

 ஏற்கெனவே அந்தந்த மாவட்டங்களில் 1 முதல் 9 வகுப்புகள் வரை இறுதித் தேர்வுகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டும் தேர்வுகள் நடைபெறும் . பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது.

2 comments:

  1. செம்ம அறிவிப்பு, சூப்பர் 💪. உலகமே வியந்து பார்க்குது, பாராட்டுது.

    ReplyDelete
  2. காலம் காலமாக ஆண்டு தேர்வு நாட்களில் மாணவ மாணவிகள் தேர்வு நேரம் மட்டுமே வருவார்கள். இது வழக்கமான ஒன்று. பின்னர் எப்படி ...?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி