இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர, ஜூலை 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதி வாய்ந்த டிப்ளமா, பி.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேரலாம்.
தமிழகத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலை துறை மற்றும் உறுப்புக் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை, சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள், www.tnlea.com; www.accet.co.in; www.accetedu.in ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூலை 23 விண்ணப்பிக்க கடைசி நாள். இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு கலந்தாய்வு, இணையதளம் வழியாக மட்டுமே நடக்கும்.மேலும் விபரங்களுக்கு, 04565 - 230801, 04565 - 224528 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி