ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் பள்ளிக் கல்வி சி.இ.ஓ., சஸ்பெண்ட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2022

ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் பள்ளிக் கல்வி சி.இ.ஓ., சஸ்பெண்ட்!

பள்ளிக் கல்வியில் பணியாற்றிய முதன்மை கல்வி அலுவலர் ஒருவர், ஓய்வு பெறும் முதல் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சி வந்ததும், ஓய்வு பெறும் நாள் அல்லது அந்த மாதத்தில், அரசு ஊழியர்களை, சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கை கைவிடப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 


இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறையில், முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு வகித்த முத்துக்கிருஷ்ணன், நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு முதல் நாள், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலக பொறுப்பாளரான இவர், ஏற்கனவே அரியலுார் மாவட்ட சி.இ.ஓ., மற்றும் பள்ளிக்கல்வி தலைமை அலுவலக துணை இயக்குனராக பணியாற்றியவர். 


இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்ததால், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி