அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்ப பாடம் படிக்கும் மாணவர்களின், தனி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணை:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணினி விருப்ப பாடத்தை படிக்கும் மாணவர்களிடம், தனி கட்டணமாக தலா, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில், கடந்த கல்வி ஆண்டில், 3.27 லட்சம் மாணவர்களிடம், 6.54 கோடி ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக, சட்டசபையில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்தார். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கான தனி கட்டணம், 200 ரூபாய் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், 3.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி