அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.நாளை. சனிக்கிழமை 25.06.2022 காலை 9.30 மணிக்கு வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில்
1. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ( கல்வி மாவட்டத்திற்குள் / வருவாய் மாவட்டத்திற்குள்)
2. இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்) நடைபெற உள்ளது.
எனவே தங்களது ஒன்றியத்தில் பணி நிரவல் செய்யப்படவேண்டிய ஆசிரியர்கள் / ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் இருப்பின் அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள்கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Message From CEO DGட .
கலந்தாய்வு நடைபெறும் இடம்
Sri Vasavi Matriculation Hr sec school
109, East Govindapuram, Dindigul (Near RM coloney).
*தமிழக அரசின் அபத்தமான செயலுக்கு எதிராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் எதிர்வினை:-*
ReplyDelete*பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 'ஏதோ ஒரு வகையில்' ஆசிரியர் கிடைப்பது மகிழ்ச்சி.*
*ஜூலை முதல் பிப்ரவரி வரை எட்டு மாதங்கள்.*
*மாதம் ஊதியம்:*
*இடைநிலை 7,500/-*
*பட்டதாரி 10,000/-*
*முதுநிலை 12,000/-*
*தமிழ்நாடு அரசு திறன் பெற்ற தினக் கூலிக்கு (skilled worker) நிர்ணயத்திறுக்கும் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ₹39/-.*
*கிட்டத்தட்ட வேலை நேரம் நேரத்தை, வேலை நாட்களை கணக்கில் எடுத்தால் அந்த ஊதியம் தான் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.*
*அதை விட சற்று கூடுதலாக ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு, அதை விட இன்னும் சற்று கூடுதலாக முதுநிலை ஆசிரியருக்கு.*
*ஜூலை முதல் பிப்ரவரி வரை பாடம் நடக்கும் அதன் பிறகு மாதிரி தேர்வுகள், தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்கும்.*
*ஆக, இந்த காலத்தில் ஆசிரியர் தேவை இல்லை.*
*தினக்கூலி நிலையில் ஆசிரியர் நியமனம் நடத்தி, ஒரு கல்வி ஆண்டை கடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ஒர் நல்வாழ்வு அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கையா? என்பதை பரிசீலிக்க வேண்டும்.*
*தற்காலிகப் பணிக்காலத்தில் வேலை செய்யும் நாட்களில் உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்தப்பட்ச உணவு, உடை, இருப்பிடம் என்று வாழ்கையை கடத்த மட்டுமே ஊதியம் பெற்றவர்கள், பணியும், ஊதியம் இல்லாத மாதங்களில் எப்படி உயிர் வாழ்வார்கள்?*
*8 மாதம் பாடம் நடத்தி தேர்விற்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்கள், மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஆகிய நான்கு மாதங்கள் வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல் இருப்பார்கள்.*
*நாடாளுமன்ற பொதுத் தேர்தலையே இரண்டு மாதங்களில் நடத்தி முடிக்கிறது தேர்தல் ஆணையம்.*
*ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டு மாதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து நிரந்தரமாக காலி பணியிடங்களை நிரப்ப இயலாதா?*
*தற்காலிக பணி, தினக் கூலி அளவு ஊதியம் என்பது ஆசிரியர் பணியைச் சிறுமைப் படுத்துவதோடு, எத்தகைய மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாவார்கள்.*
*ஏழ்மையை, வறுமையை பயன்படுத்தி நடத்தப்படும் உழைப்பு சுரண்டல் இல்லையா?*
*அரசு உழைப்பு சுரண்டலில் ஈடுபடுவது நியாயமா?*
*இது சமமான கற்றல் வாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?*
*ஆசிரியர் ஊதியம், ஆசிரியர் நியமனம் சமமற்ற நிலையில் இருக்கும்.*
*ஆனால் மதிப்பீடு மட்டும் சமமாக இருக்கும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் முன் வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?*
*அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக உள்ள மனநிலை மாறாமல் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவது கடினம்.*
மிக சரியான கூற்று
ReplyDelete