இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2022

இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல், இன்று வழங்கப்பட உள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்று மதியம், 12:00 மணி முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் நகல் கிடைத்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தேர்வுத் துறை இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, இரு நகல்கள் எடுத்து, நாளை பகல், 12:00 மணி முதல் வரும், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடம், 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் மற்றும் மறுமதிப்பீடு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. We compassionate ask you to utilize this area in a solid way, which invites the opportunity of conclusion of the perusers.

    ReplyDelete
  2. Copies of the Plus 1 General Exam answer sheet will be available for download from the website www.dge.tn.gov.in starting today at 12:00 noon. Those who wish to apply for re-sit or revaluation can also download the application from the same website.

    ReplyDelete
    Replies
    1. Copies of the Plus 1 General Exam answer sheets will be available for download starting today at 12:00 PM. Students wishing to apply for revaluation or re-sit can also download the application forms. Ensure to follow the provided guidelines and complete the application process within the specified timeframe.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி