தகுதியற்ற விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்!அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2022

தகுதியற்ற விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ்!அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 

''அரசு கல்லுாரிகளில் உரிய தகுதியின்றி குறுக்கு வழியில் சேர்ந்த, கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழக மாணவர்கள், வெளிநாட்டில் படிக்க, பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. 


தற்காலிக நியமனம்

இதன்படி, தமிழகம் -- ஆஸ்திரேலியா உயர் கல்வி நிறுவனங்களில், இரு நாட்டு மாணவர்களும் படிக்கும் வகையில், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.சேலம் பல்கலையில் முதுநிலை வரலாறு தேர்வில், ஜாதி ரீதியான கேள்வி இடம் பெற்றது குறித்து, விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

உயர்கல்வித் துறையை சேர்ந்த இளங்கோ ஹென்றிதாஸ், தனசேகர், விஜயலட்சுமி ஆகிய மூன்று பேர் குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்.தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களாக பணி அமர்த்தப்படுவோர், 'நெட் அல்லது செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.கடந்த ஆட்சி காலத்தில், குறுக்கு வழிகளில் நியமிக்கப்பட்டவர்களில் பலர், கவுரவ விரிவுரையாளர்களுக்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அவர்கள் உரிய தகுதி பெறுவதற்கு, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தேர்ச்சி பெற்று விட்டால், பணியில் தொடரலாம்.


விரைவில் அறிவிப்பு


தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களது இடத்தில் வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இது தவிர, அனைத்து வகை அரசு கல்லுாரிகளிலும் உள்ள காலியிடங்களில், ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி