Jul 10, 2022
EMIS - தமிழக கல்வி கட்டமைப்பு சிதைக்கப்படும் அபாயம்!
*கற்பித்தல் நேரத்தைக் கபளீகரம் செய்யும் EMIS*
ஆசிரியர்களின் மதிப்பு மிக்க கற்பித்தல் நேரத்தையும் மாணவர்களின் கற்றல் நேரத்தையும் வீணாக்கும் EMISஐயும் அதன் திறனை அறிந்தும் ஆசிரியர்களை அலைக்கழிக்க அதிகார மமதையில் வலம் வரும் பள்ளி கல்வி ஆணையரகம் முதல் வட்டாரக் கல்வி அலுவலகம் வரை உள்ள அதிகாரிகள் திருந்தா விட்டால் கல்வித்துறையை கரை சேர்க்க முடியாது.
மாநில அளவில் சில அதிகாரிகளும் மாவட்ட அளவில் சில அதிகாரிகளும் என நூறுபேர் தங்கள் அலுவலக மேஜையில் மீதுள்ள கணினியில் நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் புள்ளிவிவரங்களை பெற வேண்டும் என்பதற்காக
தமிழ்நாட்டின் பல இலட்சம் ஆசிரியர்கள் காலை வகுப்பறை சென்றவுடன் அலைபேசி ஆப்புகளுடன் அணுவணுவாய் சித்திரவதை படவேண்டுமா?
இனியாவது திருந்துங்கள்...
EMIS செயல்திறனை அதிகப் படுத்துங்கள்.
இல்லையேல் EMISக்கு மூடு விழா நடத்தி விட்டு மாற்று வழி யோசியுங்கள்.
மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விட்டு யாருக்காக கல்வித்துறையை நடத்தப் போகிறீர்கள்.
இறுதியாக ஒன்று அதிகாரியாக இருந்து முடிவெடுத்தால் ஆயுளுக்கும் விடிவு கிடையாது.
அதிகாரிக்கும் அலுவலர்க்கும் ஆயிரம் வேறுபாடுகள் உண்டு.
அலுவலராக இருந்து சிந்தியுங்கள் அப்போதாவது விடிவு கிடைக்குமா பார்ப்போம்.
*-இப்படிக்கு*
*EMIS ஆல் நொந்து போன ஆன தமிழ் நாட்டு ஆசிரியர்*
*EMIS ம் 6796 இடைநிலை ஆசிரியர்களும்*
மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர்கள் 6796
இரண்டு வேலை நாட்களில் மாறுதல் பெற்றவர்கள் 340
மீதி உள்ள 6456 ஆசிரியர்கள் இரண்டு தற்செயல் விடுப்பை இழந்திருக்கிறார்கள்.
6456 x 2நாட்கள் 12912 கற்பித்தல் நாட்களை தொடக்கக் கல்வித்துறை இழந்திருக்கிறது.
6456 ஆசிரியர்களுக்கும் சராசரியாக ஒரு ஆசிரியர்க்கு 30 மாணவர்கள் என்று எடுத்துக் கொண்டால்
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மாணவர்களின் மதிப்பு மிக்க கற்றல் நேரத்தை வீணடித்த கல்வித் துறை அதிகாரிகள் வெட்கப்படவேண்டாமா?
ஒரு நாளைக்கு 200 ஆசிரியர்களுக்குக்கூட மாறுதல் வழங்கும் திறனற்ற EMIS வைத்துக் கொண்டு
6796 இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நாளில் மாவட்ட மாறுதல் வழங்கி
அடுத்த நாள் பட்டதாரி ஆசிரியர் 6773 பேருக்கும் மாவட்ட மாறுதல் வழங்கிடத் திட்டம் வகுத்த அதிகாரிகள்
நாசா விஞ்ஞானிகளைவிட திறன் வாய்ந்த விஞ்ஞானிகள்.
கடந்த வருடம் lkg, ukg சென்ற ஆசிரியர்களுக்கு இதேபோல் மாறுதல் வழங்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை மாவட்டத் தலைநகரங்களில் பல நாட்கள் காக்க வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் இந்த அதிகாரிகள்.
தற்போதைய மாவட்ட மாறுதலும் முந்தைய சரித்திர சாதனையை முறியடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
என்ன ஆலோசனை நடத்தினாலும் அதிமுக ஆட்சியில் செய்த பாவங்களை அப்படியே செய்து வருகிறீர்கள். தகுதித் தேர்வு எழுதி மறுபடியும் தேர்வு. இன்னமும் எத்தனை தேர்வு தான் வைப்பீர்கள். தகுதி இருந்தும் வயது அதிகமாக உள்ளவர்கள் குடும்பம் குழந்தைகளை கவனிப்பார்களா? தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? விடியல் கிடைக்கும் என்று ஓட்டு பலரிடம் கெஞ்சி போடவைத்தவர்களின் தலைகளில் மண் அள்ளி போடும் நிலையாக உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் மோசமான நிலையில் உள்ளது. கல்வித்துறை. இனியாவது விடியல் கிடைக்குமா???? இவ்வாறு எழும் குரல்கள் முதல்வர் அவர்களின் காதில் விழவில்லையா? இல்லை இதுதான் அவர்கள் எடுத்துள்ள முடிவா? மாண்புமிகு கலைஞர் ஐயா அவர்கள் எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார். ஆனால் இப்போது????
ReplyDelete