JEE நுழைவுத் தேர்வு வரும் 25க்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2022

JEE நுழைவுத் தேர்வு வரும் 25க்கு மாற்றம்

 'ஜே.இ.இ., பிரதான தேர்வின் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு, வரும் 21க்கு பதிலாக 25ம் தேதி நடைபெறும்' என, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது.


ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ.,முதல் கட்ட நுழைவுத் தேர்வு, கடந்த ஜூன் 23 முதல் 29 வரை நடந்தது. இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு, வரும் 21 முதல் 30 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இந்த தேர்வு வரும் 25ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6.29 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உட்பட 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான 'ஹால் டிக்கெட்'டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி